கடவுள் சிரிக்கும் தருணங்கள்
ஜூலை 11, 2007
கடவுள் இரண்டு வேளைகளில் சிரிக்கிறார். இரு சகோதரர்கள் தங்களுக்குள் நிலத்தை பிரித்து, குறுக்கே கயிற்றைப் பிடித்து, “இந்தப் பக்கம் என்னுடையது. அந்தப் பக்கம் உன்னுடையது” என்று சொல்லிக் கொள்ளும்போது அவர் சிரிக்கிறார். “இந்தப் பிரபஞ்சமே என்னுடையது. இதில் ஒரு துண்டு நிலத்தை வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் என்னுடையது, அந்தப் பக்கம் உன்னுடையது என்கிறார்களே!” என்று நினைத்துச் சிரிக்கிறார்.
கடவுள் மற்றும் ஒருமுறை சிரிக்கிறார். குழந்தையின் நோய் தீர்க்க முடியாததாக உள்ளது. தாய் அழுது கொண்டிருக்கிறாள்; வைத்தியர் அவளிடம், “அம்மா, பயப்படாதே. நான் குணப்படுத்தி விடுகிறேன்” என்று சொல்கிறார். அப்போதும் கடவுள் சிரித்துக் கொள்கிறார். குழந்தை இறக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பமானால், யாராலும் அதைக் காக்க முடியாது என்பது வைத்தியருக்குத் தெரியவில்லை.
(ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள், பக்கம்: 515-516)
Entry Filed under: ஆன்மீகம், கடவுள், தத்துவம், மனிதன், ராமகிருஷ்ணர். .
Trackback this post | Subscribe to the comments via RSS Feed